சீயான் விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஸ்கெட்ச் படம் வெளியாகி ரசிகர்களிடமும்,வசூல்ரீதியாகவும்,விமர்சனரீதியாகவும் அதிக வரவேற்புபெற்றது.அதன்பின் அவர் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான அப்படம் இன்னும் முடியவில்லை.
இந்த சமயத்தில் விக்ரம் பெரிதும் எதிர்பார்ப்பது கடாரம் கொண்டான் படத்தைத்தான்.கமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் இப்படம் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாம். மேலும் இன்னும் ஓரிரு வாரத்தில் இப்படம் சென்சாருக்கு தயாராகிவிடுமாம்.
இதனால் ஏற்கனவே சொன்னதுபோல் மே இறுதியில் இப்படம் வெளியாவது உறுதி என சொல்லப்படுகிறது.மே31-ம் தேதி சூர்யாவின் என்.ஜி.கே படமும் வெளியாகவுள்ள நிலையில் பெரும்பாலும் அப்படத்துடன் இப்படம் மோதும் என்றே சொல்லப்படுகிறது. Read More:[என்.ஜி.கே வுடன் மோதும் கடாரம் கொண்டான் !!!]
கடந்த ஆண்டு பொங்கலுக்கு இதேபோல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் விக்ரமின் ஸ்கெட்ச் படமும் ஒரே நாளில் வெளியாகி அதில் ஸ்கெட்ச் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகவரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த மோதல் தேவையா ? விக்ரம் படம் வெளியானால் அந்த படத்தின் திரைக்கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ விக்ரமின் நடிப்பிற்காகவே படம் வெற்றியடையும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.