சர்கார் படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல் படங்கள் வந்து கோலிவுட்டை வசூலாலும்,விமர்சனத்தாலும் தெறிக்கவிட்டது.இது விஜய்க்கு 63- வது படம் ஆகும்.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 'தளபதி 63' படத்தின் பூஜை நாளை நடைபெறவுள்ளதாகவும், இந்த பூஜையில் விஜய், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவிருப்பதாகவும், நாளை மறுநாள் அதாவது ஜனவரி 21 முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படம் இவ்வருட தீபாவளி தினத்தில் வெளீயிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை பின்னி மில்லில் அரங்கு அமைத்துள்ளனர். அட்லி படங்களில் 2,3 கதாநாயகிகள் இருப்பது வழக்கம்.இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். மேலும் 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.இதற்காக கீர்த்திசுரேஷ்,ஆத்மிகா ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது.புதிதாக 'பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக் ஆகியோர் சமீபத்தில் இந்த படத்தில் இணைந்தனர்.