சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி !!!

     
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் டீசர் உள்பட அனைத்து புரமோஷன்கள் குறித்த தகவல்கள் வெளிவரவுள்ளதாக இயக்குனர் ராஜேஷ்  ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


அடுத்தக்கட்டமாக 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திபரவிவருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.


இதற்கு அடுத்து சிவகார்த்திகேயனின் 15வது படத்தை 'இரும்புத்திரை' இயக்குனர் மித்ரன் இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பும் வரும் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. 

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படமும் இயக்குனரின் முந்தைய படமான 'இரும்புத்திரை' போலவே ஒரு அழுத்தமான சமூக விழிப்புணர்வு குறித்த் கருத்து டெக்னாலஜி கலந்து கூறப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


எப்படி பார்த்தாலும் சிவகார்த்திகேயன் கையில் இரண்டு பெரிய படங்கள் உள்ளது. இந்த படங்கள் அவருக்கு கோலிவுட்டில் ஒரு தனி இடத்தை அமைத்து கொடுக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area