பொன்னியின் செல்வனில் நயன்தாரா !


பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது. 

கடந்த வருடம் இயக்குநர் மணிரத்னம் அவரின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும்,மகேஷ் பாபு,விஜய்,விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின.மேலும் இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியராக ஜெயமோகன் பணிபுரிந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமலே பொன்னியின் செல்வன் திரைப்பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டன.
தற்பொழுது மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக பேசப்பட்டது வருகிறது.தமிழ் சினிமாவின் தனித்துவமான திறமை கொண்ட இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவர் நீண்ட நாளாக தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க முயற்சி செய்து வருகிறார்.ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து இந்த படம் தள்ளி போய் கொண்டே வந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது நயன்தாராவையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க மணிரத்தினம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இது மட்டும் உண்மையானால் நயன்தாரா பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area