நடிகர் சூர்யா தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் 'NGK' படத்திலும் கே வி. ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்திலும் முனைப்புடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இதை அடுத்து நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இயக்கத்தில் வரலற்று சரித்திர படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சசிகுமார் சுப்பிரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகிய படங்களை இயக்கினார் அதன்பின் திரைப்படங்களை இயக்காமல் நடிக்க தொடங்கினார். வருகிற பொங்கலன்று வெளியாகவுள்ள பேட்ட படத்திலும் ரஜினியின் நண்பராக அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக ஒரு சரித்திர கதையை படமாக இயக்க அவர் முயன்று வருகிறார். இதற்காக பாகுபலி இயக்குனர் ராஜமவுலியை சந்தித்து கூட அவர் அறிவுரை கேட்டார். ஆனால், அப்படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த கதையை விஜயிடம் கூறி அவரை நடிக்க வைக்க முயன்றார்.
ஆனால், புலி படம் கொடுத்த தோல்வி காரணமாக சரித்திர கதை படத்தில் நடிக்கவே விஜய் யோசிப்பதாக தெரிகிறது. அதே போல் விக்ரமிடமும் இந்த கதை கூறினாராம் மஹாவீர் கர்ணா படத்தின் காரணத்தால் அவரும் யோசித்தரம் ஆகவே , யாரும் நடிக்க முன்வரவில்லை எனத்தெரிகிறது.
அதனால்,இந்த கதையை நடிகர் சூர்யாவிடம் கூறி ஓ.கே செய்துள்ளாராம் சசிகுமார். அநேகமாக இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருப்போம்...
Poster Design : Fans Express