ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த 'சர்கார்' திரைப்படம் வசூல்ரீதியாக வெற்றியடைந்ததே தவிர ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன அதனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி அடையவில்லை. இதனை தொடருந்து தன் அடுத்த படத்திற்கு கதை அமைக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்வெளியான
"பேட்ட" படம் மாபெரும் வெற்றியடைந்தது.இதனை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையப்போவதாகவும் அந்த படத்தின்
பெயர் 'நாற்காலி' எனவும், படத்தின் கதாநாயகி 'கீர்த்தி சுரேஷ்' எனவும் சில மாதங்களுக்கு முன் சில வதந்திகள் வெளியாகின, அந்த செய்தியை மறுத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, என்னுடைய அடுத்த படத்தின் தலைப்பு ,'நாற்காலி'அல்ல. தயவு செய்து வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள் என தனது ட்விட்டர் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் முருகதாஸிடமிருந்து, ரஜினிகாந்த்166 படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை காத்திருப்போம்...“ Naarkkaali” is not the title of my next project , pls stop spreading rumors.— A.R.Murugadoss (@ARMurugadoss) January 16, 2019