நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற மே மாதம் 31ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது, இதனை தொடர்ந்து அடுத்ததாக கே.வி ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்திலும் நடித்துவருகிறார் .
இந்தநிலையில், நடிகர் சூர்யா நடிக்கும் தனது 38 வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி என்ற மலையாள நடிகை நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார்.இசை ஜி.வி.பிரகாஷ் அமைக்க உள்ளார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
Starting shoot with #DirSudhaKongara from tomorrow...! We need all your love..!!#SudhaKongara @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @guneetm @sikhyaent @rajsekarpandian @SF2_official pic.twitter.com/fDXaPfCc4H— Suriya Sivakumar (@Suriya_offl) April 7, 2019
இந்த படம் சூர்யா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படமாகவும் கருதப்படுகிறது ஏனென்றால் இயக்குனர் சுதா கொங்காராவிற்கு 'இருதிசுற்று' வெற்றியை தொடர்ந்து அடுத்தப்படமாகும்.