சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் "தர்பார்" இன்று பூஜையுடன் துவங்கியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" எனும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த போஸ்டரை திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று பூஜையுடன் துவங்கியது.
இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது, இந்த படத்தில் அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்பட ஷூட்டிங்க்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார்.
இந்த படம் பொங்கல் 2020 அன்று வெளிக்கொண்டுவர படக்குழுவினரால் திட்டமிடப் பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி பட ஷூட்டிங் கூட மும்பையை கதைக்களமாக கொண்டுதான் படமாக்கப்பட்டது குறிப்பிடதக்கது.