சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் நன்றாக இருப்பதாக அதன் முதல்காட்சி பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.ஒவ்வொரு பிரேமிலும் ரஜினியிசம் உச்சத்தில் இருக்கிறது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம், பொங்கலையொட்டி இன்று உலகமுழுவதும் வெளியாகியுள்ளது . இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா என இரண்டு கதாநாயகிகள். இவர்கள் தவிர விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக் , பாபி சிம்ஹா, சசிகுமார் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்களுக்கு அதிகவரவேற்பு கிடைத்துள்ளது . படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் மாபெரும் வெற்றிபெற்றது , பேட்ட படத்தைப் பார்க்க சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இன்று உலகமுழுவதும் வெளியாகியுள்ள ரிலீசாகியுள்ள முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் சூப்பர்ஸ்டார் நடிப்பை சிலாகித்து சமூகவலைதளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர்களின் பதிவு :
"இது தான் தலைவர் படம். ஆனந்தக் கண்ணீர் வருகிறது. கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி" என பேட்ட படத்தின் இடைவேளை வரை பார்த்த ரசிகர்கல் தெரிவித்துள்ளனர் .
இந்த பத்தாண்டில் வந்த ரஜினியின் மிகச் சிறந்த படம் இது தான். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் ரஜினியிசம் உச்சத்தில் இருக்கிறது. நன்றி கார்த்திக் சுப்புராஜ்' என்கிறார்கள் ரசிகர்கள் .
அனிருத்தின் பின்னணி இசை நன்றாக இருப்பதாகவும், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் ரசிக்கும்படி இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்.