நடிகர் சிம்பு தற்பொழுது இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னனர் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் காரணத்தால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ள இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.அரசியல் பின்னணியில் உருவாக உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் சிம்பு, யுவான்ஷாங்கர்ராஜா கூட்டணியால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது இப்படத்தின் நாயகி யார் என்ற தகவல் கிடைத்துள்ளது.சமீபத்தில் வெளியாகிய 'அடங்கமறு' படத்தின் கதாநாயகி 'ராஷி கண்ணா' தான் சிம்புவுடன் இணையப்போகும் அந்த நாயகி இது குறித்த அதிகாரபூர்வ தகவல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருப்போம்.