பொன்னியின் செல்வனில் இணையும் ஐஸ்வர்யா ராய்,அமிதப்பச்சன்.


பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது. அந்த காலத்தால் அழியாத காவிய நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர்.,சிவாஜி கணேசன்,கமல்ஹாசன் உள்பட பலர் முயற்சி செய்தனர். ஆனால் இதுவரை யாராலும் முடியவில்லை.

கடந்த வருடம் இயக்குநர் மணிரத்னம் அவரின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும்,மகேஷ் பாபு,விஜய்,விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின.மேலும் இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியராக ஜெயமோகன் பணிபுரிந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமலே பொன்னியின் செல்வன் திரைப்பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டன.
தற்பொழுது மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி என முன்று திரையுலகிலும் முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மணிரத்னம். அடுத்த கட்டமாக தமிழில் விஜய் ,விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் விக்ரம் படத்தில் நடிக்குமாறு ஒப்புகொண்டதாக அறிவிப்புகள் வெளியாகின. அவருடன் சிம்பு, ஜெயம் ரவி, உள்பட மல்டி ஸ்டார்கள் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய இரண்டு கேரக்டர்களில் அமிதப்பச்சன், ஐஸ்வர்யாராயை நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area